பெருவில் பாரிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

பெருவில் இன்று(26) பிரித்தானியா நேரம் காலை 8.41 மணியளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் மொயபம்பாவில் இருந்து 180 கி.மீ கிழக்காக 105 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

8.0 அளவுடைய இந்த நில நடுக்கம் இந்த வருடத்தில் ஏற்றட்ட நில நடுக்கங்களில் பெரியது என அது மேலும் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், பிரேசில், கொலம்பியா மற்றும்  ஈகுவடோர் அகிய நாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருவில் உள்ள லிமா என்னும் நகரத்தில் உள்ள விடுதியின் 9 ஆவது மாடியில் தான் அதிர்வை உணர்ந்ததாக அமெரிக்கப் பயணி ஒருவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலம் 600 மைல்களுக்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.