பூமியை நெருங்கி வரும் ஆபத்து

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அதே போன்று  பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் இன்னொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

1990 MU எனும் விண்கல்லே இவ்வாறு பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த விண்கல் 4 தொடக்கம் 9கிலோமீற்றர் வரையான விட்டத்தைக் கொண்டது.

தற்போது சூரியனைச் சுற்றி வரும் இவ்விண்கல் 2027ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ஆம் திகதி பூமிக்கு மிகவும் அண்மையாக வரும் எனவும், இதன் போது ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.