பூமிக்கு அருகே இராட்சத சிறுகோள் – ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும்

பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகா தொன் அழிவு சக்தியுடன் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோளிற்கு அஸ்டிரொய்ட் FT 3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீற்றர் விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று தெரிவிக்கப்படுகின்றது. நாசாவின் கணிப்பின்படி 2019ஆண்டு முதல் 2116ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள்கள் தாக்குதலை பூமி சந்திக்கவுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது.

அஸ்டிரொய்ட் FT 3 என்றழைக்கப்படும் இந்த சிறுகோள் ஒக்டோபர் 3ஆம் திகதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டிச் செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தக் கோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஆபத்து குறைவாகும். ஆனால் வரும் பாதை மாறி பூமிக்கு நேரே வந்தால்  முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகம் இல்லை என்று நாசா அறிவித்துள்ளது.