பூநகரியில் பாரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.

323 கிலோ எடைகொண்ட 117 கஞ்சா பொதிகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுகின்றமை தொடர்பாக கிடைத்த தகவலிற்கமைவாக இன்று (29) அதிகாலை 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் வவுனியா மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளும் நாச்சிக்குடா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.