பூசா கடற்படை முகாமிலும் கொரோனா சிகிச்சை பிரிவு

பூசா கடற்படை முகாமில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 136பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் வெலிகந்த வைத்தியசாலையிலும் கொரோனா விசேட சிகிச்சைப் பிரிவொன்று நிறுவப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளனவர்களுக்கு தடையின்றி சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் இந்தப் பிரிவில் நிறுவப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை அங்கொட தொற்று நோய்ப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்க போதிய வசதிகள் இல்லாதவிடத்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.