விடுதலைப்புலிகளின் ஆவணங்களுடன் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்தே, மேற்கண்ட சான்றுப் பொருள்களுடன் அதே பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.