புனித ஞாயிறு தாக்குதல் – யாழ் திரையரங்குகள் பாதிப்பு

கடந்த ஏப்பிரல் மாதம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை யாழ் திரையரங்குகளை அதிகம் பாதித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் திரையரங்குகளை தவிர்ப்பதால் சில படக் காட்சிகள் நிறுத்தப்படுவதுடன், திரையரங்குகள் தமது கட்டணத்தை 500 ரூபாயில் இருந்து 300 ரூபாய்களாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.