பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கும் 16 ஆம் வரை விளக்கமறியலில்

பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரை மீறி செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இந்த சத்தியகிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.