வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நேற்று (22) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1956 தொடக்கம் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் பணம், படிப்பு, பண்பு ஆகியவற்றைத் தெரியாதவர்களாக இருந்ததாகவும் இதன் காரணத்தினாலேயே அரசியலானது மாற்றமுற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
எனவே தற்போதுள்ளவர்கள் பணபலம் இல்லாவிட்டாலும் ஓரளவு படிப்பும் பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனகூறினார்.
மேலும் தேர்தலுக்காக பாரிய தொகையை செலவு செய்யும் பிரதிநிதிகள், அதை திருப்பிப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போதே ஊழல், சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றமைக்கு காரணம் என்றும் கூறினார்.
இதன் பின்னர் சாதி, மதத்தை பயன்படுத்தி மேலும்பணம் சம்பாதிக்கவும் அவர்கள் முயற்சி செய்வதாககுற்றம் சாட்டிய அவர், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார்.
இதனால் எமது உறுப்பினர்கள் சுயசிந்தை அற்றுநடக்கத் தலைப்படுகின்றனர். இவையாவும் சேர்ந்தே அரசியல் ஒரு சாக்கடை என்ற பெயரைப் பெறவைத்துள்ளன என சுட்டிக்காட்டினார்.
ஆனால் தான் சாக்கடையின் விளிம்பில் நின்று அதில் தள்ளிச் செல்லப்படும் அசுத்தங் களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றேன் என்றும் இதுவரையில் அந்த அசுத் தத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.