தான் சிறிலங்கா சென்றிருந்த போது, பயங்கரவாதத்தின் கோரமுகத்தைக் கண்டதாக இந்தியப் பிரதமர் மோடி, கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் தெரிவித்தார். இதற்கு எஸ்சிஓ நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே மோடி மேற்படி தெரிவித்தார்.
பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.