நேற்று கொழும்பில் தரையிறங்கிய சீன விமானம்; இலங்கைக்கு மீண்டும் மருத்துவ உதவி

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகுதி மருத்துவ உதவிப்பொருட்கள் நேற்று (17) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன தூதரக தகவல்களின்படி,COVID-19 தொடர்பிலான 20,000 சோதனை கருவிகள், 10,000 என் -95 முகமூடிகள், 100,000 அறுவை சிகிச்சை முகமூடிகள், 10,000 பாதுகாப்பு உடைகள், 1,000 கண்ணாடிகள் மற்றும் 50,000 அறுவை சிகிச்சை கையுறைகள் என்பன இந்த உதவித் தொகுதியில் அடங்கும் என அறியமுடிகிறது.

இதற்கு முன்னரும் சீனா இவ்வகையான உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருந்த்து குறிப்பிடத்தக்கது.