நுளைவு அனுமதியை நீடிக்குமாறு கோரிக்கை

சிறீலங்காவில் தற்போதும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரும் தமது நுளைவு அனுமதியை நீடிப்பதற்குரிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நாளை (4) முதல் குடிவரவு திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த பதிவுகளை மேற்கொள்ள முடியும். பின்னர் அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள் என அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் தங்கியுள்ளவர்களின் நுளைவு அனுமதி மே மாதம் 14 ஆம் நாள் வரை நீடிக்கப்படும் என சிறீலங்கா அரசு முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது சிறீலங்காவில் 11,531 வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.