நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் திருநாள் உற்சவம் –

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர் .

வருடம் தோறும் தைப்பொங்கல் தினத்துக்கு முதல் நாளான 14ஆம் திகதி தமிழர் திருவிழா பொங்கல் நிகழ்வுகள் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறும் நிலையில் இவ் வருடமும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 14.01.2020 அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

எனவே, அனைத்து மக்களையும் இந்த பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.