நான்கு கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) அறிவித்தார்.
தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியையும் குறித்து அனுப்பியிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நால்வருக்கே மரண தண்டனை நிறைவேற்றப் படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுபற்றிக் கைதிகளுக்கோ அவர்களின் உறவினர்களுக்கோ இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்தால், மேன்முறையீடு செய்யக்கூடும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று கூறினார்.