நாடு விரைவில் பாதாளத்தில் வீழ்ந்து விடும்! மைத்திரிபால சிறிசேன கண்டுபிடிப்பு

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காகச்சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த சவாலிலிருந்து நாட்டைக்காப்பதற்கு நாட்டை நேசிக்கும் ஒருகுழுவினாலேயே முடியும் எனவும்அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்சவின் பண்ஹி ந்தக விப்லவய (எழுத்தாணியின் புரட்சி)விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். மல்வத்து, அஸ்கிரிய அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங் கத்தினரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துறை மற்றும் கலைத்துறைவிருந்தினர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.