நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அத்துரலிய ரத்ன தேரர்

பொதுஜன பெரமுன கட்சி தனக்கு ஆசனம் வழங்கவில்லை என்பதனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் தனித்துப் போட்டியிடப் போவதாக அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதற்கமைவாக அபே ஜனபல பக்ஷய என்னும் கட்சியின் சார்பாக தான் தனித்து போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார்.