நவம்பர் 16 சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்பு

சிறீலங்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் நாள் அரச தலைவர் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்கான விண்ணப்பங்களை இன்றில் (19) இருந்து எதிர்வரும் 7 ஆம் நாள் வரையிலும் சமர்ப்பிக்கலாம் எனவும் சிறீலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிதி வைப்பீடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் நாள் வரையில் மேற்கொள்ளப்படலாம்.

இன்று இரவு வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில் அரசியல்வாதிகள் எத்தகைய நடவக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.