நவம்பர் மாதம் சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்றிற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்போது வேட்புமனுத் தாக்கலுக்கான நாள் தீர்மானிக்கப்படுவதுடன் மேற்படி காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றார். சிறிலங்கா ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.