நளினி விடுதலை: அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரமும் அளிக்க ஆணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி  விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

முழு விபரங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி தாக்கல் செய்ய நளினி தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தம்மை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்