முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி ஆகியோர் தங்கள் உறவினருடன் வீடியோ அழைப்பில் பேசுவதற்கு சிறை விதிகளில் இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
இலங்கையிலுள்ள நளினியின் தாயார் தனது மகளை வீடியோ அழைப்பில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.