நயகரா நீர்வீழ்ச்சி அருகே பருவநிலை மாற்றத்தால் வெளியில் வந்த 100 ஆண்டுகள் பழமையான படகு

கனடா நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகள் பழைமையான படகு ஒன்று நீரின் மேல் வந்துள்ளது.

கடந்த 1913ஆம் ஆண்டு குறித்த படகு ஹார்ஸ் ஷு அருவிக்கு அருகே தரை தட்டிய பின்னர் நீரில் மூழ்கியது. சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்துள்ளது.

பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்தப் படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் காணப்படுகின்றது. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், படகு மேலும் இழுத்துச் செல்லப்பட்டு அருவியில் இருந்து கீழே தள்ளப்படும் என நயகரா நகர அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்தப் படகினைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்கின்றனர்.