தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாளை(21) கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார். நாளை காலை 10.30இற்கு இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது தொடர்பாக இன்று விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளும், தேர்தல்கள் செயலக அதிகாரிகளும், பொதுநிர்வாக சேவை உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்னர்.

தற்போதைய சூழலில் தேர்தலை நடத்த முடியாத நிலை இருப்பதால் அதற்கு மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.