தேசிய அடையாள அட்டை நடைமுறை தொடர்பான அறிக்கை

எதிர்வரும் மே 11ஆம் திகதிக்குப் பின்னர், ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் வீட்டிலிருந்து வெளியேறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருந்தும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.