தென்னிலங்கையில் தொடரூந்து விபத்து – மூவர் பலி

கொழும்பில் உள்ள கொல்பிட்டி பகுதியில் தொடரூந்து மோதியதால் மூவர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அளுத்கம பகுதி நோக்கிச் சென்ற தொடரூந்தே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் சிறீலங்கா கவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளர்.