திலீபளை நினைவுகூருவதற்கு கிளிநொச்சியிலும் தடை ; நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவு நாள் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்தது.

இதேபோன்று நேற்று தமிழ்தேசிய கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் தடையுத்தரவை வழங்கினார்.

அந்தத் தடை உத்தரவின் பிரகாரம், கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அஞ்சலி நிகழ்வுகளையோ, ஊர்வலங்கள், கூட்டங்களையோ எதனையும் நடத்தக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.