திருவள்ளுவர் குரு பூசைதினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி குரு பூசைதினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட்து.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமயில் நடைபெற்ற.இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வில் நகரசபைஉறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன்,நா.சேனாதிராஜா,சுமந்திரன்,தமிழ்விருட்சம் கண்ணன்,நகரசபைஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.