திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

தமிழ்த் தேசியக் கட்சியினர் ஏற்பாட்டில், திருகோணமலை கடற்கரை காந்தி சதுக்கத்திற்கு அண்மையில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.

2006ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த நிலையிலேயே இத்துயர சம்பவம் நடைபெற்றது.