தியதலாவை படை முகாமிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு

சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ படைவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும் அங்கிருந்து படை தலைமையகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் குறித்த மாணவர்கள் இராணுவ தலைமையகம் நோக்கி
சிறப்பு பேருந்து மூலம் வீடுகளுக்கு அனுப்பிவையப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

அங்கு படைத்தளபதி தளபதி சில்வாவை சந்தித்த பின்னர் தமது வீடுகளை நோக்கி செல்லவுள்ளனர்.

கொவிட் – 19 வைரஸ் தொற்று ஆரம்பமான சீனாவின் வுஹான் நகரில் தங்கி கல்வி கற்றுவந்த குறித்த 33 இலங்கை மாணவர்களும் இம்மாதம் முதலாம் திகதி சிறப்புவிமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதன் பின்னர், தியதலாவை படைவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.