தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா சந்தேகம் .

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் 18 பேருக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட இரத் மாதிரிகள் அநுராதபுரத்திற்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.

அதன் முடிவுகள் சனிக்கிழமை இரவு வெளியிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த 18 பேரில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இன்று இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும்.

ஏனைய 15 பேருக்கும் தொற்று இல்லை என்றும், இதில் தொற்று இருப்பதாக கூறப்பட்ட மூவரும் இதற்கான சிகிச்சைப் பிரிவுக்கு செல்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.