தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் – அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்

  • தாயக இறைமையை மீளப்பெறும் வரலாற்றுப் பயணத்தின் 400வது ஆண்டு.
  • தமிழ் மொழி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தின் 63வது ஆண்டு.
  • தாயகத் தமிழிளைஞர் அரசியல் விழிப்புணர்ச்சி எழுச்சியின் 45 வது ஆண்டு.

எங்கள் தாயக வரலாற்றில் 05.06.1619 அன்று யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனை போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்புப் படைகள் கைதாக்கியதன் வழி 116 ஆண்டுகள் யாழ்ப்பாண அரசு தனது இறைமையைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடிய நிலை மாறி யாழ்ப்பாண அரசின் இறைமை போர்த்துக்கேய மன்னரால் அபகரிக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புக்கு 1591ம் ஆண்டில் போர்த்துக்கேயர்களின் 2வது யாழ்ப்பாணப் படையெடுப்பின் பொழுது சைமன் பிஞ்ஞன் என்னும்
போர்த்துக்கேயத் தளபதியினால் கைப்பற்றப்பட்ட அரசகுமாரனாகிய எதிர்மன்னசிங்க குமாரனை போர்த்துக்யேர் நிபந்தனைகளுடன் மன்னனாக்கி அவனின் யாழ்ப்பாண அரசின் பிரதானிகளுடன்
பேச்சுவார்த்தை நடாத்திச் செய்த நல்லூர் உடன்படிக்கை 1591ல் தான் வித்தாகியது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

dutch தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் - அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்கூடவே கண்டிச் சிங்கள அரசின் மீது போர்த்துக்கேயர் போர் தொடுத்து அதனை வீழ்ச்சியடையச் செய்யாது தடுப்பதற்கு விமலதர்மசூரியன் (1593- 1604), செனரதன் ( 1604-1635) ஆகியோருக்கு எதிர்மன்னசிங்க குமாரன் தென்னிந்தியாவில் இருந்து படை மற்றும் ஆயுத உதவிகளை
யாழ்ப்பாண அரசின் வழியாகச் செல்ல அனுமதித்துக் கண்டிய அரசைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளே யாழ்ப்பாண அரசின் மீது போர்த்துக்கேயர்களுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியது என்பது வரலாற்று
ஆய்வாளர்களின் மற்றொரு கருத்து.

சிங்கள அரசுகளுக்கு யாழ்ப்பாண அரசு அவற்றின் பாதுகாப்புக்கு காலத்துக்குக் காலம் உதவி அளித்தமைக்கு 1545 இன் பின் 1ம் சங்கிலி மன்னன் போர்த்துக்கேயருக்கு எதிராக சீதவாக்கை, கண்டி, கோட்டை அரசுக்களுடன் இணைந்து போரிட்ட வரலாறும், போர்த்துக்கேயரை ஆதரித்த புவனேகபாகுவுடன் நேரடியாகப் போரிட்ட வரலாறும் சான்றாகின்றன. கூடவே 1552இல் புவனேகபாகு இறக்க அவனின் மகள் வழிப்பேரனான தர்மபாலன் ஆட்சிக்கு வந்த பொழுது அவனது தந்தையான விதியப்பண்டார போர்த்துக்கேய ஆட்சியை ஏற்க மறுத்து புத்தரின் புத்ததந்ததாதுவுடனும் விலையுயர்ந்த பொருட்களுடனும் யாழ்ப்பாண அரசுக்கு வந்து அரசியல் புகலிடம் கோரி வாழ்ந்தான்.

ஆயினும் விபத்தொன்றில் விதியப்பண்டார மரணமடைய அவனுக்கு மரியாதை அளித்து 1ம் சங்கிலி மன்னனால் நல்லூர் இராசதானியின் வடவாசலில் கட்டிய ஆலயமே பூதவராயர் ஆலயம். 1560இல் யாழ்ப்பாண அரசு மேல் போர்த்துக்கேயர் மேற்கொண்ட 1ம் படையெடுப்பில் இவ்வாலயம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டதும் அவர்கள் புத்ததந்தத்தைப் பொடிப்பொடியாக்கி நீர்நிலைகளில் கரைத்தனர் என்பது
வரலாற்று ஆய்வாளரான முனைவர் சி.க.சிற்றம்பலம் அவர்களின் “ யாழ்ப்பாண இராச்சியம்” நூலின் 70-71ம் பக்கங்களில் உள்ள செய்தியாக உள்ளது. இவைகள் யாழ்ப்பாண அரசு சிங்கள அரசுக்களுக்கும் பாதுகாப்பும் சிங்கள மன்னருக்கு அரசியல் புகலிடமும் தனக்கு ஆபத்து ஏற்படும்
என்னும் நிலையிலும் அளித்தமைக்கு வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.

இதனாலேயே பிரித்தானியக் காலனித்துவ அரசு இலங்கைக்குச் சுதந்திரம் அளிக்கவென நியமித்த சோல்பரி ஆணைக்குழுவுக்கு அளித்த அறிக்கையில் தமிழர்கள் நாட்டின் தொன்மைமிகு குடிகள் மட்டுமல்ல சிங்களவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவியவர்கள் எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

மேலும் 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி சிங்கள பௌத்த பேரினவாத அரசு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழர்களின் மொழியுரிமையைப் பறித்தது. இதனை எதிர்த்து காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தினை சிங்கள பௌத்த பேரினவாத அரசு வன்முறையைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடாத்திக் கலைத்ததும் அல்லாமல் கொழும்பில் தொடங்கி கல்ஓயா அம்பாறை பகுதிவரை வன்முறைத் தாக்குதல்களை வளர்த்துச் சென்று 150 அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் குடித்தனர்.

61sathyagraha தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் - அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்அந்த வகையில் தமிழர்களின் சனநாயக சாத்வீகப் போராட்டங்களை இனஅழிப்பின் மூலம் முறியடிக்கும் அரசியல் வன்முறைக் கலாச்சாரத்தையும் அரச பயங்கரவாதத்தை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழர்களை ஒடுக்கி அழிக்கும் கருவியாக்கும் தந்திரோபாயத்தையும் தொடக்கி வைத்து இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகின்றன எனவும் கூறலாம்.

அதேவேளையில் சிங்கள மொழியினையும் பௌத்தத்தையும் சிங்கள மக்கள் மறந்து துறந்து ஆங்கிலேயமொழி ஆங்கிலேயப் பண்பாடு கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சேர் பொன்னம்பலம் இராமநாதன், கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி போன்றவர்களும் யாழ்ப்பாண மாணவர் காங்கிரசும் தான் சிங்கள மக்களிடை அவர்களது மொழி பண்பாடு கலாச்சாரம் குறித் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க உழைத்தவர்களுள் முன்னணியில் நிற்கின்றார்கள் என்பதையும் இவ்விடத்தில் நினைவு கூரவேண்டியுள்ளது.

தமிழ்மொழியும் தமிழர்களும்தான் வரலாற்றில் சிங்கள மொழிக்கும் சிங்களப் பண்பாடு கலாச்சாரத்திற்கும் பாதுகாவலர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்களுள. ஆனால் சிறிதளவு கூட நன்றியில்லாது தமிழர்களை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் சிங்களவர்களுக்கும் சிங்களத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிரான பகைமைகளாகக் காட்டித் தமிழர்களைக் காலத்துக்குக் காலம் இனப்படுகொலைகளுக்கும் கலாச்சார இனஅழிப்புகளுக்கும் உள்ளாக்கி இலங்கைத் தீவின் அமைதியையும் வளர்ச்சியையும் சீர்குலைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைத்தீவு என்றுமே தமிழ் சிங்கள அரசுக்களின் தனித்தனி ஆட்சி மையங்களைக் கொண்டிருந்தது என்கிற வரலாற்று உண்மையை ஏற்பதன் வழியாகவே இலங்கைத் தீவில் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பச் செய்யலாம்.

மேலும் 1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தனது ஆயுதப்படைகளைக் கொண்டு கலாச்சார இனஅழிப்புத் தாக்குதல் மூலம் குழப்பி 11 உயிர்களைப் பறித்த அநீதிக்கு நீதி கேட்கவென பலவழிகளில் முயன்று வந்த தமிழ் மாணவர் பேரவையின் நிறுவனர்களில் ஒருவராகிய திரு பொன் சிவகுமாரன் அவர்கள் கோப்பாய் கிராமிய வங்கியில் இருந்து அவரைக் கைது செய்யவெனத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைத் தாக்க முயல்கையில் அந்தப் பொலிஸ் அதிகாரி தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும் தன்னைச் சுட்டுத் தன்னுடைய 3 சிறுகுழந்தைகளையும் ஆதரவற்றவர்களாக்கி விட வேண்டாம் என்று கெஞ்சியதை மனிதாபிமானத்துடன் ஏற்று அந்தப் பொலிஸ் அதிகாரியைச் சுடாது தான் தன்னிடமிருந்த சயனைட்டைக் கடித்து உயிர்தியாகம் செய்தும் இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன.

sivakumar pon தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் - அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்தமிழ்ப்போராளிகளை பல கேவலமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கும் உலகுக்கு உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு தமிழ்ப்போராளியும் மனிதாயத்தினையும் மனிதமாண்பையும் போற்றி மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக மட்டுமல்ல மனிதகுலத்தின்
மாண்புக்காகவும் மனிதாயத்திற்காகவும் தங்களை ஆகுதியாக்கிய வரலற்றின் தொடக்கமாகத் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் பிறர்வாழத் தன்னுயிர் தந்திடும் உயிர்த்தியாகம் இலங்குகிறது.

1972இல் சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசை தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தி சிறுபான்மையினத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் சோல்பரி அரசியல் அமைப்புத் திட்டத்தின் மூலம் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளமன்ற ஆட்சிpயில் பங்கேற்பதற்கு அளித்த அரசியலமைப்பின் 29(2) வது பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்களை நாடற்ற தேச இனமாக்கினார்.

அதனை அடுத்து 11.01.1974இல் கலாச்சார இனஅழிப்பை யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் நடாத்தித் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிப்பதும் அல்லாமல் அவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் வாழும் உரிமை அனைத்தையுமே இன்று வரை பல்வேறு
வழிகளில் இனஅழிப்பு நோக்கில் அழித்து வருகின்றனர்.

படைபலம் கொண்டு தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை அகதிகளாக்கி அவர்களின் பாதுகாப்பையும் அனைத்து வளர்ச்சிகளையும் தடுத்து வரும் நிலையில் தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை கொண்டு அவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க உலக அரசுக்கள் உதவுவதன் வழியாகவே அவர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி என்கிற அடிப்படை பிறப்புரிமைகளை அவர்கள் அனுபவிக்கும் பாதுகாப்பான அமைதியான ஆட்சியில் அவர்களை வாழவைக்க முடியும்.

இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட மக்கள் உண்மையான உள்ளத்துடனும் உறுதியுடனும் உழைப்பதே அவர்கள் தங்கள் தாயகத்திற்கும் தாய்மொழிக்கும் செய்யும் கடமையாக அமைய முடியும்.