தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தான் இணைவதை இந்தியா விரும்பவில்லை என்பதாலேயே தான் அக்கட்சியில் இணையவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தான் இணைவதை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்த விடயம் தொடர்பாக தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் என்னும் ஒட்டுக்குழு உறுப்பினராகவே விக்னேஸ்வரன் செயற்பட்டார்.
மக்கள் நலன் கருதி அவர் செயற்படவில்லை என்றும், தங்கள் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகளை உடைக்கும் விதமாகவும், மக்களைக் குழப்பும் விதமாகவுமே அவர் செயற்பட்டு வருகின்றார் என்றும் தெரிவித்தார்.