தமிழ் மக்களை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ் வடமராட்சி குடத்தனைப் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினர் பொதுமக்கள் மீது பெண்களின் நிலை, குழந்தைகளின் அவலநிலை எதையும் கருத்தில் கொள்ளாது அநாகரீகமான முறையில் காட்டுமிராண்டித்தனமாக வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.

இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னனிராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். காவல்துறையினருக்கு எதிராக உரிய முறையில் எமது சட்டவாளர்களால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.