தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு

பிரித்தானியாவில் ஜனநாயக வழிகளில் போராட்டத்தை மேற்கொண்ட தமிழ் மக்களை படுகொலை செய்வேன் என சைகை மூலம் மிரட்டல் விடுத்த சிறீலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இன்று பதவி உயர்த்தப்பட்ட 177 படை அதிகாரிகளில் முன்னர் பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகாராக பணியாற்றிய பிரியங்கா பெர்ணன்டோவும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படை அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தி வருவது நாம் அறிந்ததே.