தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் சஜித்தின் மனைவியும் தீவிர முயற்சி

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பாரியார் ஜலனி பிரேமதாச மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்படி, இன்று (05) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்ற அவர், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகையை சந்தித்தார்.

இதன் போது, கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.