தமிழ் தலைமைகளின் இயலாமை காரணமாகவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கிழக்கு தமிழர்களின் மாற்று தேரர்கள் அல்ல அதேபோல் தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு, தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதகார முஸ்லிம் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான விளைவு விரைவில் அனைவரையும் சுடும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் வரித்துக்கொண்ட அரசியல் நாகரிகம் ஒன்று இருக்கிறது. எனது கொள்கையை விட்டுக் கொடுக்கா மல், இயன்றவரை அனைவரையும் அன்பு டன் நிதானமாக அனுசரித்து போவேன். அப்படித்தான் நான், த.தே.கூட்டமைப்பை யும் அரவணைத்து அனுசரித்து போகிறேன். அத னால்தான் கல்முனை மக்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு போக முடிவு செய்த போது கூட்டமைப்பின் அம்பாறை எம்.பி. கோடீஸ்வரனை அழைத்து சொன்னேன்.
அவர்தான் நண்பர் சுமந்திரன் எம்.பி.யை, வஜிர அமைச்சரின் உறுதி கடிதத்துடன் கூட்டி வாருங்கள் அண்ணா என்று என்னை வலிந்து கேட்டுக்கொண்டார்.
ஆகவே நான்தான் நண்பர்கள் தயாகம கேவையும், சுமந்திரனையும் கல்முனை க்கு அழைத்து வந்தேன். அங்கே சுமந்திரனுக்கு கிடைத்த எதிர்மறை வரவேற்பை நான் வெறுக்கிறேன். எனக்கு நேர்மறை வரவேற்பு கிடைத்தது, என்பதற்காக சுமந்திரனை தாக்க முயன்றதை நான் ஒருபோதும் ஏற்க முடியாது. த.தே.கூ. பல விடயங்களை கோட்டை விட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கான பதில் இதுவல்ல.
அதேபோல், மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல்வாதிகளை நிராகரித்து விட்டு, பெளத்த தேரர்கள் கூறியதன் பேரில் போராட்டத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் முனைவது சரியானதல்ல.