தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் நடாத்திய குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பிரதான ஈகைச் சுடரினை அருட்தந்தை தேவதாசன் அவர்கள் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன். அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.