தமிழில் தேசிய கீதம் பாடினால் தமிழீழம் உருவாகிவிடும்: விமல் வீரவன்ச

“சிறீலங்கா சிங்கள – பெளத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆகவேண்டும். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும். அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு – பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும்” என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்

தேசிய கீதம் தொடர்பாக உருவாகியிருக்கும் சர்ச்சைகள் குறித்துப் பேசிய போதுதான் இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்தார்.