தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி

யாழ்.மாநாகரத்தில் அவசரமாக சிமாட் லாம் போல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய சிந்தனையை நெஞ்சில் நிறுத்தி தமிழர் கல்வி மேம்பாட்டிற்கு அரும்பணியாற்றி தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை தீவிலும் தனக்கென்று தடம் பதித்திருந்த பொருளியல் ஆசான் மறைந்த வரதாராஜனின் புதல்வரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் முதற்பகுதி வருமாறு,

கேள்வி:- 5ஜி எனப்படும் ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் குறித்த உங்களின் நிலைப்பாட்டினைக் கூறுங்கள்?

பதில்:- 5ஜி தொழில்நுட்பத்தின் ஊடாக இணையசேவை வழங்கப்ப டுகின்றபோது அது ஒரு ஜி.பி வரையிலான வேகத்தினையும் அதிகரித்ததாக காணப்படும். இந்த வேகமானது அதியுயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைக்கற்றைகளால் வலையமைக்கப்படவுள்ளது. இந்த தொழில் நுட்பமானது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. ஏன் என்றால் குறித்த கம்பங்களை நிறுகின்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கடந்த மாதம் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் நாங்கள்  5ஜி தொழில்நுட்பத்தினை கொண்டு வருவதற்கான உட்கட்டுமான வசதிகளை நிறுவி வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே குறித்த கம்பங்கள் ஊடாக 5ஜி தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்வுள்ளது வெளிப்படை

கேள்வி:- நவீன தொழில் நுட்பம் உள்வாங்கப்படுவதில் என்ன தவறிருக் கின்றது?

பதில்:- உலகின் ஒரு வெற்றிகரமான நாட்டை மக்களுடன் ஆலோசிக்காமல் உருவாக்க முடியாது என்று சிங்கப்பூர் நாட்டைக் கட்டியெழுப்பிய அதன் முன்னாள் பிரதமர் அமரர் லிகுவான் யூ கூறியிருந்தார்.  அப்படியிருக்க, பல நாடுகளில் பரிசோதனை அளவில் இருக்கின்ற இத்தொழில்நுட்பத்தின் தேவை தற்போதைய நிலையில் யாழ்.மாநகர சபைக்கு தேவையானதா? என்ற கேள்வி எழுகின்றது.

உலக நாடுகள் தொழிநுட்பதுறையில் முன்னேறும் போது அதற்கு ஈடு இணையாக எமது மாநகரமும் முன்னேற வேண்டும் என்பதில் எமக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் யாழ்.மாநகரத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள் கூட பூர்த்தி செய்யாத நிலையில் சிமாட் சிற்றிகளுக்கே உரித்தான் இவ்வாறான தொழில் நுட்பம் தற்போது எமக்கு தேவை தானா? அத்துடன் இத்தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப்படும் கதிர் வீச்சினை அளப்பதற்குரிய எந்த பொறிமுறையும் இல்லாத நிலையில் அது பற்றிய எந்த விபரங்களும் தரப்படாத இடத்தில் இந்த 5ஜினை யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அறிமுகப்படுத்துவதானது மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் ஆரோக்கியத்திற்கும் பாரிய பரிசோதனையாக அமைக்கின்றது.

கேள்வி:- உயிரினங்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்று எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- ஜெருசலமின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த வைத்தியர் யேல் ஸ்டீன் பெடரல் கம்னியூகேசன்ஸ் கமிசனுக்கு கடிதமொன்றை அண்மையில் எழுதியிருந்தார். 5ஜி எம்.எம்.வி பற்றிய முக்கிய விடயங்களை குறிப்பிட்டு அதுகுறித்த கவலைகளையும் அதனால் மனித சருமம் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டியிருந்தார். மனித சருமமானது நுண்ணலைக் கதிர்வீச்சில் 90சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் தலையிலிருந்து கால்விரல்கள் வரையில் முக்கியமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல காரணிகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி மனித உடலில் உள்ள வலி ஏற்பிகளை உடலினுள்ளேயே வெடிக்கச் செய்யலாம். கண்கள் பாதிக்கப்படுவதோடு உயிரணு வளர்ச்சியை கணிசமாக கட்டுப்படுத்துவதோடு நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் மண்டலத்தினையும் பூரணமாக சிதைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கின்றது. jjj தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

ஆக 5ஜி தொழில்நுட்பமானது உள்வாங்கப்படுவதால் ஆரோக்கியத்தினை பாதிப்பதோடு  தமிழினத்தினை ஒட்டுமொத்தமாக கருவறுக்கும் செயற்பா டொன்றுக்கே வழிவகுக்கும். இதனைவிடவும் இதற்காக அமைக்கப்படும் கோபுரங்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவும் இல்லை.

கேள்வி:- யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் 18 சிமாட் லாம் போல்கள் தான் நிறுவப்படவுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- சிமாட் லாம் போல் என்ற பெயரில் தான் இவை யாழ்.மாநாகரச சபை எல்லைக்குள் அறிமுகமாகின்றன. 18 சிமாட் லாம் போல்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சிமாட் லாம் தூண்கள் நாட்டப்பட்டு அதில் அன்டனாக்கள் சிறிதான அளவில் பொருத்தப்படும். அவை அளவில் சிறிதாக காணப்பட்டாலும், அவற்றின் அதிர்வெண் மிகவும் அதிகமானது. இத்தகைய அதியுயர்ந்த அதிர்வெண் அலைவரிசைகள் எமது மக்களின் உடலுக்குள் புகுந்து கலங்களைச் செயலிழக்கச் செய்துவிடும். இதனால் நோய் எதிர்ப்பு கலங்கள் இலகுவில் செயலிழக்கச் செய்யப்பட்டு புற்றுநோய், கருச்சிதைவு என்பன அதிகம் ஏற்பட்டுவிடுகின்றன. பூமிக்கு வரும் கதிர்வீச்சினை தடுப்பதற்காகவே ஓசோன் படலம் இயற்கையாகவே காணப்படுகின்றது. அவ்வாறிருக்க, இத்தகைய அன்டனாக்கள் மூலம் வெளியாகும் கதிர்வீச்சினை தடுப்பதற்கு எமது மக்களின் உடல்களைச் சுற்றி எவ்வகையான பாதுகாப்பு உள்ளது என்பதை ஒருகணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆகவே இயற்கையாகவோ செயற்கையாகவோ0 எம் உடல்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லாதவிடத்து எம்மை நாமே தான் காப்பாற்ற வேண்டியுள்ளது. இதனைவிடவும் இந்த சிமாட் லாம் போல்கள் அனைத்திலும் கமராக்கள் பூட்டப்படுகின்றன.

சிமாட் லாம் போல்களில் கமராக்கள் அத்தியாவசியமான விடயம் என்பது ஒருவாதமாக இருந்தாலும், அவற்றுக்கான தூண்கள் சுமார் 20மீற்றர் உயரத்தில் சன நெருக்கடி மற்றும் குடியிருப்புக்கள் நிறைந்த இடங்களில் அமைக்கப் படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சி அடுத்தவாரம்……………..