தமிழர்களின் நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளைப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் சொந்த நிலங்களில் 27.5 ஏக்கர் காணிகளை பொது மக்களுக்கு மீள வழங்கும் நிகழ்வு நேற்று (12) அன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட இக்காணிகளை மீளவும் தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமைவாக இந்த காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் ஆளுநர் இந்தக் காணிக்குரிய ஆவணங்களை யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு முரளிதரனிடம் வழங்கினார்.

2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த 2963 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டதுடன், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் சொந்த நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்குவது போன்ற ஒரு நிகழ்விற்கு தலைமை தாங்கிய தமிழரான ஆளுநர், தனது செயலில் ஒரு தன்னிறைவை எட்டியது போல படங்கள் அமைந்துள்ளது.