தனியார் காணியில் மகாபோதி அமைக்க திட்டம்

யாழ். வலி வடக்கு தையிட்டிப் பகுதியிலுள்ள தனியாரிற்கு சொந்தமான காணியொன்றில் மகாபோதி அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் பிரதேச சபையிடம்  கோரியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து தாம் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் கருத்துத் தெரிவிக்கையில், 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில், வலி.வடக்கில் பேக்கரிகளில் பணிபுரிந்த சிங்கள பௌத்தர்கள் தங்கள் வழிபாட்டிற்காக20 பரப்புக் காணியில்  பௌத்த விகாரை ஒன்றை அமைத்தனர். தற்போது அந்தக் காணியில் விகாரை அமைப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் கோரியிருப்பது என்பது அனுமதிக்க முடியாதது.

இதனாலேயே நாம் நீதிமன்றம் செல்லவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.