டைனோசர்கள் அழிந்த நாளில் நடந்தது என்ன?

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளனர்.

மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீற்றர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின.

அதாவது உலகின் மிகப் பெரிய விலங்குகளாகக் கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்தக் காலம். இந்தப் பேரழிவின் உயர் தெறிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து/ அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

200 கிலோமீற்றர் அகலமுள்ள இந்த அமைப்பு மெக்ஸிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கீழ் அமைந்துள்ளது. அதன் முக்கியமான பாதுகாக்கப்பட்ட மத்திய பகுதிகள் சிக்சுலப் துறைமுகத்திற்கு அருகே உள்ளன.

இந்த ஆய்வுக் குழு ஒரு பெரிய நீளமான பாறையை ஆய்விற்குட்படுத்தியது. அதிலும் குறிப்பாக, 130 மீற்றர் நீளமுள்ள அந்தப் பாறையின் ஒரு பகுதியே செனோசோயிக் சகாப்தத்தின் முதல் நாளை ஆவணப்படுத்துகின்றது.

அந்தப் பாறையானது பல்வேறு பொருட்களின் சிதைந்த வடிவம் என்றாலும், அதன் உள்ளடக்கங்களை கொண்டு ஒரு தெளிவான கதையை ஏற்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

dianosar2 டைனோசர்கள் அழிந்த நாளில் நடந்தது என்ன?பாறையின் 20 மீற்றருக்கு கீழுள்ள பகுதியில் கண்ணாடி சிதைவுகள் மிகுந்து காணப்படுகின்றது. குறுங்கோள் தாக்கத்தினால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் அழுத்தத்தால் உருவானதே இந்த பாறை. அதற்கடுத்த சில நொடிகளில் பள்ளத்தின் அடிப்பகுதி வரை இந்த விளைவு ஏற்பட்டு அதன் தன்மையும் மாறுகின்றது.

அதன் பின்னர், பாறைகள் பல பிளவுகளாக வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி, அதில் நீர் கரைபுரண்டோடி தற்போதுள்ள அமைப்பு உருவானதாகத் தெரியவந்துள்ளது.

வெப்பம் அழுத்தத்தின் காரணமாக உருவானது என்றால், அவை குளிர்ந்து பாறைகளாக காரணமான நீர், அந்தக் காலத்தில் அப்பகுதியை சூழ்ந்திருந்த கடல் நீரிலிருந்து கிடைத்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். எரிமலை குழம்பு கடல்நீரை சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வை ஒத்த விளைவின் காரணமாக இந்தப் பாறைகள் உருவாகியதும் தெரியவந்துள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள விளைவுகள், குறுங்கோள் பூமியை தாக்கிய நொடி  முதல் சில மணிநேரங்கள் வரை நிகழ்ந்தவை ஆகும். ஆனால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நீரும், குப்பைகளும் இடைப்பட்ட பகுதிகளை நிரப்பியது. அப்போது, மழை பொழிந்திருக்கக் கூடும்.

இதற்கான கால அளவு தாக்கத்திற்குப் பிறகு முதல் சில மணிநேரங்கள் ஆகும்.

இந்நிலையில், தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளது பாறையின் 130 மீற்றர் அளவுள்ள பகுதியே. அப்போது சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரமாக இது உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

dianosar3 டைனோசர்கள் அழிந்த நாளில் நடந்தது என்ன?இந்த தாக்கம் ஒரு மாபெரும் ஆழி பேரலையை உருவாக்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சுனாமி அலைகள் அப்போது பாறைகள் உருவாகிக் கொண்டிருந்த பள்ளத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரையோரங்களில் மோதியிருக்கும். அதன் விளைவாக பல கிலோமீற்றர்கள் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள் பாறை வரிசையின் மேற்புறத்தை மூடியிருக்கும்.

இவை எல்லாமே ஒரே நாளில் நடந்தவை என்று ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சீன் குறிக் கூறுகின்றார்.  “ஜெட் விமானங்கள் வேகத்தில் சுனாமி பேரலைகள் பயணிக்கும். எனவே, சுனாமி பேரலைகள் கடற்கரையிலிருந்து பல கிலோமீற்றர் தூரம் சென்று, மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 24 மணிநேரம் என்பது தேவைக்கும் அதிகமான நேரம்” என்று அவர் கூறுகின்றார்.

இந்த மிகப் பெரிய தாக்கத்தில் சுனாமியும் ஒரு அங்கம் என்பதில் குளிக்கின் அணியினர் உறுதியாக உள்ளனர். ஏனெனில், மிகப் பெரிய பரப்பளவில் ஏற்பட்ட வெப்பத்தின் தீவிரத்தை குறைத்து, தற்போது கண்டறியப்பட்டுள்ள பாறைகளில் காணப்படும் உள்ளடக்கங்களைக் கொண்டு வந்து சேர்ந்ததில் சுனாமியின் பங்கு  கண்டிப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆச்சரியமளிக்கும் வகையில் தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையில் சல்பர் எங்கேயுமே காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடலின் மேல் தட்டுப் பகுதியில் பல்வேறு கனிமங்கள் இருக்கும். இந்நிலையில், அதன் மேல் மோதி அதிர்வை ஏற்படுத்திய குறுங்கோளால் உண்டான பாறையில் சல்பர் இல்லாதது வியப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

சில காலணங்களால், சல்பர் அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஆவியாகி இருக்க வேண்டும். இது தான் டைனோசர்களின் வாழ்வு எப்படி முடிவிற்கு வந்தது என்ற பிரபலமான கோட்பாட்டை ஆதரிக்கும் விடயமாக இருக்கின்றது.

அதாவது மிகப் பெரிய அளவிலான சல்பர் நீரில் கலந்து, ஆவியாகி, அப்பகுதியின் வெப்ப நிலையை மிகவும் குறைத்து, அக்காலத்தில் வாழ்ந்த விலங்குகள் மட்டுமின்றி தாவர வகைகளின் வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டு சென்றிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது.