டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை

முதன்முறையாக டைட்டானிக் கப்பலைத் தேடிக் கடலில் இறங்கியவர்கள், உடைந்த கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர்.

சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின் போது, அட்லான்டிக் கடலில் 3,800 மீற்றர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.

உடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு நல்ல நிலையில் உள்ளது. மற்ற சிறப்பு அமைப்புக்கள் கடலில் சிதைந்து போயுள்ளன.

அதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.

ஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியைக் கொடுத்ததாக டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார். டைட்டானிக் பற்றி ஆர்வம் காட்டுபவர்களுக்கு பிடித்தமானது அதனுடைய கப்டனின் குளியல் தொட்டி. அது இப்போது காணாமல் போயுள்ளது.

அந்தப் பக்கம் உள்ள கபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகின்றது. அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன. இந்த சிதைவு தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்றது என்று அவர் தெரிவிக்கின்றார். டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

titanic 1 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைவலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பக்ரீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிக் கிடக்கின்றது. கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீற்றர் (370 மைல்கள்) தொலைவில் கடலில் கிடக்கின்றது.

அந்தக் காலத்தில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட அந்தப் பயணிகள் கப்பல் 1921 இல் சவுத்தாம்டனில் இருந்து நியுயோர்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் 2,200 பேர் மற்றும் கப்பல் பணியாளர்களில் 1,500இற்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்து போனார்கள்.

மரியானா மர்மக் கடலின் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர். பசுபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீற்றர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதியில் அவர்கள் சென்றிருந்தனர்.

இந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீற்றர் நீளம், 3.7 மீற்றர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் டி.எஸ்.வி. லிமிட்டிங் பக்டர் என்ற நீர்மூழ்கியில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டான் நீர்மூழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

titanic 2 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை600 மீற்றர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைச் சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விடயம். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவான கீழ் நீரோட்டமும் இந்த நீர்மூழ்கிப் பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.

டைட்டானிக் பற்றிய சில தகவல்கள்

  • 1985இல் டைட்டானிக் உள்ள இடத்தை அமெரிக்க – பிரெஞ் குழுவினர் கண்டறிந்தனர்.
  • 1986 கப்பலின் உடைந்த பாகங்களை ஆல்வின் நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்தது.
  • 1987 முதலாவது மீட்பு பயணத்தில் டைட்டானிக்கின் 1,800 கலைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன
  • 1995 உடைந்த கப்பலுக்கு ஜேம்ஸ் கமரூன் பயணம் மேற்கொண்டார். அப்போது எடுத்த காட்சிகள் அவருடைய டைட்டானிக் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
  • 1998 முதலாவது சுற்றுலாவாசிகள் அங்கு மூழ்கி பயணம் செய்தனர்.

அத்துடன் டைட்டானிக் கப்பல் கூட்டின் ஒரு பகுதி மேலே கொண்டு வரப்பட்டது.

  • 2005 இரண்டு வீரர்களைக் கொண்ட நீர்மூழ்கிகள் உடைந்த கப்பலுக்குச் சென்றன.
  • 2010 தானியங்கி ரோபோக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்தன.
  • 2012 உடைந்த கப்பல்கள் தற்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
  • 2019 டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் நீர்மூழ்கி ஐந்து முறை நீர்மூழ்கிப் பயணத்தை மேற்கொண்டது.

நீரில் மூழ்கிய பயணங்கள், பின்னர் தயாரிக்கப்படவுள்ள ஆவணப் படத்திற்காக அட்லான்டிக் புரடக்ஸன்ஸ் நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காட்சிகளைப் படம் எடுப்பதுடன், இந்த ஆய்வுப் பயணத்தில் உள்ள விஞ்ஞானிகள், உடைந்த கப்பலில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உறைய வைக்கும் சூழ்நிலைகளில், கும்மிருட்டான நீரில், அதி தீவிரமான அழுத்தத்திலும் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.

டைட்டானிக் சிதைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுப் பயணத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி கிளாரே பிட்ஜ்சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

உடைந்த கப்பலில் நுண்கிருமிகள் உள்ளன. அவை தான் உடைந்த பாகத்தில் உள்ள இரும்பையும் சாப்பிடுகின்றன. அதனால் துருவேற்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன. அது உலோகத்தின் பலவீனமான நிலையாகக் கருதப்படுகின்றது என்று அந்தப் பெண் விஞ்ஞானி கூறுகின்றார்.

Titanic3 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைஉடைந்த பாகங்களில் துருவேறிய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்கள் மிகவும் பலவீனமானவையாக இருப்பதால், ஏதும் இடையூறுகள் ஏற்பட்டால் முற்றிலும் நொறுங்கி சரியக் கூடியவையாக உள்ளன.

அட்லான்டிக் ஆழ்கடலில் வெவ்வேறு வகையான உலோகங்கள் எப்படி அரிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றார்கள். டைட்டானிக் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பதை மதிப்பிடுகின்றார்கள்.

உடைந்த கப்பல் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை ஆழத்திற்கு சென்று ஆவணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று கிரீன்விச்சில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளித் கூறுகின்றார்.

டைட்டானிக் பேரழிவிற்கு சாட்சியாக இப்போது இருப்பது இந்த உடைந்த கப்பல் தான் என்று அவர் குறிப்பிடுகின்றார். அப்போது உயிர் தப்பிய அனைவரும் இப்போது காலமாகி விட்டார்கள். எனவே நடைந்த பாகங்கள் சொல்வதற்கு ஏதோ தகவல் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று அவர் கூறுகின்றார்.