டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

டெல்லியில் மாஜ்புர் பகுதியில் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் வீசிய கல்லால் காயமடைந்த தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று டெல்லியில் மாஜ்புர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் போராட்டக்காரர்கள் வீசிய கல்வீச்சில் காயமடைந்து உயிரிழந்துள்ளார். போராட்டக்காரர் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.