ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

ஜிம்பாப்பே விடுதலைக்குப் பின்னர் அந்த நாட்டின் முதல் தலைவரான றொபேட் முகாபே தனது 95ஆவது வயதில் காலமானார். நீண்ட காலம் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

1924ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி றோடேசியாவில் (ஜிம்பாபேயின் முன்னய பெயர்) பிறந்தார். 1980இல் ஜிம்பாபே சுதந்திரம் பெற்றதிலிருந்து 2017 வரை 37 ஆண்டுகள் முகாபே அதிபராக இருந்தார்.

ஆட்சியின் ஆரம்பத்தில்  நாயகனாக பார்க்கப்பட்ட முகாபே தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ஊழல் மிக்க சர்வாதிகாரியாக மாறினார்.

மிஷன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற றொபேட் கபிரியேல் முகாபே. நெல்சன் மண்டேலா கல்வி கற்ற ஃபோர்ட் ஹாரே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று ஆசிரியராக பயிற்சி பெற்று, 1958இல் பணியின் நிமித்தம் அவர் கானா சென்றார்.

Mugabe4 ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்அங்கு சால்லி ஹாஃபிரோனை சந்தித்த முகாபே, 1961இல் அவரை திருமணம் செய்து கொண்டார். கறுப்பு தேசியவாதிகளின் தேர்வாக அவர் மாறும் முன்பு முகாபேயை விட சால்லி ஹாஃபிரோன் அதிக அரசியல் நாட்டம் கொண்டவராக திகழ்ந்தார்.

1974ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஜோசுவா நகோமோடு மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக கெரில்லா போர் தொடுக்கும் தலைவராக மாறினார். இதனால் அவர் பிரபலமானார்.

பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை களைய அவர்கள் ஒப்புக் கொண்டனர். நாட்டுப்பற்று முன்னணி கட்சியை உருவாக்கிய அவர்கள் 1980 பெப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.

Mugabe5 ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்10 ஆண்டுகள் நாடுகடந்து வாழ்ந்த பின்னர், தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்னர் தான் றொபேட் முகாபே ஜிம்பாப்வே வந்தடைந்தார். ஒருங்கிணைந்த அரசை உருவாக்கிய அவர், நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

அவர் பிரதமர் பதவி வகித்த தொடக்க ஆண்டுகளில் உலக நாடுகளின் தலைவர்கள் அவரை சந்தித்தனர். 1986இல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட கியுபா அதிபர் பிடல் கஸ்ரோவும் அவரை சந்தித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரெட் தட்சருடனும் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். தொடக்கத்தில் தன்னுடைய வெள்ளையின எதிரிகளின் பொருளாதார செல்வத்தை அவர்களே வைத்திருக்க அனுமதிக்கும் கொள்கையை கொண்டிருந்தார்.

தன்னுடைய முதல் மனைவி இறந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் 1996இல் தன்னுடைய தட்டச்சுப் பணியாளரான கிரேஸ் மாருஃபுவை முகாபே திருமணம் செய்து கொண்டார். முகாபேவுக்கும் கிரேஸ் மாருஃபுக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

1997அம் ஆண்டு சர்ச்சைக்குரிய நில சீர்திருத்தத்திற்கு நிதி ஆதரவு அளிக்கும் பேச்சுவார்த்தையில் இருந்து டோனி பிளேயர் தலைமையிலான பிரிட்டன் அரசு விலகிக் கொண்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் முகாபே தோல்வியடைந்த பின்னர் வெள்ளையர் வைத்திருந்த பண்ணைகளை முகாபே ஆதரவு ஆயுதப்படையினர் கைப்பற்றத் தொடங்கினர்.

Mugabee castro ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்இதே நேரத்தில் முகாபே சாவில்லி ரோ உடையையும், சஃபாரி உடையையும் கைவிட்டு, பரப்புரை பயணத்தின் போது தமது முகம் பொறித்த பிரகாசமான வண்ண உடையணிந்து வலம் வந்தார்.

அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஆளும் ஸானுபிஎஃப் கட்சியால் பெரிய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றில் ஆடம்பரமான கேக்குகளும் அடங்கின. வெள்ளையின விவசாணிகளுக்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் ஆபிரிக்கர் மத்தியில் கதாநாயகனாக திகழ்ந்தார்.

இருப்பினும் அவருடைய புகழ் குறிப்பாக நகர்ப்புறங்களில்   குறைந்தது 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுற்று அதிபர் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். வன்முறை நடைபெறுவதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியான எம்.டி.சி. கட்சி பின்வாங்கிய பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் அவர் வெற்றியடைந்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளால் முதலீட்டிற்காக சீனா எதிர்நோக்கும் கிழக்கத்திய பார்வை கொள்கைக்கு முகாபேயை வழிநடத்தியது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்வதுண்டு. அவரது மகள் போனா ஹொங்கொங்கிலும், சிங்கப்பூரிலும் கல்வி கற்றார்.

நான்கு ஆண்டுகளாக நடத்திய ஓர் அதிகார பகிர்வு அரசாங்கத்திற்கு பின்னர் கறுப்பின ஜிம்பாப்வே மக்களுக்கு பொருளாதாரத்தைக் கட்டுப்படுது்தும் உரிமையை வழங்குவது என்ற உள்நாட்டு கொள்கையை மையமாக வைத்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸானு பிஎஃப் கட்சி வெற்றி பெற்றது.

நீண்டகாலம் பதவியில் இருந்ததாக விமர்சிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு 91ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆடம்பர விடுதியில் நடைபெற்றது. கேக் வெட்டி கொண்டாடியதுடன், யானைகள் பலவும் பலியிடப்பட்டன.

முதலாளித்துவம் மற்றும் காலனித்துவத்தை எதிர்த்து போராடுவதாக அக்கட்சி கூறி வந்தது. எனினும் அந்நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அக்கட்சியின் ஆதரவாளர்களையும் தாக்கியது.

தம் புரட்சி முடிந்தால் பதவி விலகுவேன் என முகாபே அடிக்கடி கூறுவார். ஆனால் தனக்கு பின்னர் யார் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என தாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தார்.

முகாபேக்கு உறுதுணையாக பாதுகாப்பு படைப்பிரிவுகள் இருந்தன. அவருடைய மனைவி கிரேஸ் முகாபே நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே 2017 நவம்பர் 15இல் ஜிம்பாபேயில் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

மக்கள் பெருங்கூட்டமாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பின்னர் பதவியை நீக்க நாடாளுமன்றம் நடைமுறைகளைத் தொடங்கிய நிலையில் 93 வயதாகி இருந்த தலைவர் பணிந்தார் 37 வருடங்கள் பதவியில் இருந்த முகாபே தானாகவே பதவி விலகினார்.