ஜனவரி 14 இல் சீனா செல்கின்றார் கோட்டாபய! இரு நாட்கள் அங்கிருப்பார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ஜனாதிபதி ´ ஜின் பிங்கின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக ஜனவரி மாதம் முதல் வாரம், ஜனாதிபதி பயணத்தை மேற்கொள்வதற்கு பீஜிங் பரிந்துரைத் திருந்தது என்றும், பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, 14, 15 ஆம் திகதிகளில் பயணத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவர் நவம்பர் 28 தொடக்கம் 30 வரை இந்தியாவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.