“சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனது

கடலின் இயற்கை மற்றும் மரபினைப் பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் புதுச்சேரி கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஜெயசீலா ஸ்ரீபன் தலைமையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஓசெர் மற்றும் மேனன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அருங்காட்சியக நிறுவுனரும், ஆய்வாளருமான அறிவன் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

பூமியில் 70 %  ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது யாவரும் அறிந்ததே. உலக அளவில் அதே விகிதத்தில் மக்கள் கடற்கரை ஓரங்களில் வசிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமான பிராணவாயு தேவைகளில் 70%  கடல்வாழ் தாவரங்கள் தான் éர்த்தி செய்கிறது.

சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்கள் தோன்றியிருக்கலாம் என்று கூறும் இன்றைய அறிவியல், அன்றைய காலகட்டத்தில் நில அமைப்பு பெருங்கடலாக இருந்திருக்கிறது. 361,740,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட உலகக் கடல் அட்லான்டிக், பசுபிக், இந்தியன், ஆட்டிக் என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 166,240,000 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட பசுபிக் பெருங்கடல் மட்டும் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நீரால் சூழ்ந்திருக்கின்றது. அதை ஒரே நேர்கோட்டில் நீட்டிப் பார்த்தோமென்றால் சுமார் 17,700 கிலோமீற்றர் அதாவது உலக நிலப்பரப்பில் பாதி அளவைத் தொடும். அதே போல உலகின் மூன்றாவது பெரிய கடலாகவும், வெப்ப மண்டலக் கடலாகவும் விளங்குவது 73,430,000 சதுர கிலோமீற்றர் பரப்புக் கொண்ட இந்தியப் பெருங்கடல்தான்.

மேலும் உலகக் கடல்களின் தனிச்சிறப்புடைய இயற்கைத் தகவலமைப்பினை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. சிறிய கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் எனக் குறிப்பிடப்படுகின்றது. அதன்படி அரபி மற்றும் வங்காள விரிகுடாக் கடல்கள் இந்தியப் பெருங்கடலில் தான் இடங்குகின்றது. இந்தியப் பெருங்கடல் என்பது குமரிக் கடலைத் தான் குறிக்கும்.

தமிழ் மக்கள் கடல்களைப் பற்றிய ஆழமான அறிவுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சங்க இலக்கிய பாடல்களே சாட்சி. கடல் என்ற சொல்லாட்சி அவற்றில் பரவிக் கிடக்கிறது. கடலைக் குறிக்கும் ஆழி என்ற சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகின்றது. கடல் சார்ந்த நிலம் நெய்தல் என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் ஏராளமான செய்திகள் தமிழில் உள்ளன. இந்தியக்் கடலைக் கட்டியாண்ட பெருமை முடியுடை மூவேந்தர்களையே சாரும். இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று. சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையை எண்ணி தற்போதைய இந்திய அரசு 2015இல் இராசேந்திர சோழனுக்கு அங்சல் தலை வெளியிட்டுள்ளது.

cholar “சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனதுசுமார் 2,172,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதாகச் சொல்லப்படும் வங்காள விரிகுடா தனக்குள் சோழமண்டலக் கடலையும் அடக்கிக் கொள்கின்றது. மற்றபடி சோழமண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 19ஆமநூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வங்க மொழி என்ற சொல்லை “இடியமா பெங்கல்லா“ என்று போர்த்துக்கீசியர்கள் அழைத்தனர். முனமதிய ஆட்சியின் போது தான் இந்தச் சொல் முதன் முதலில் அறியப்படுகின்றது. 16ஆம் நூற்றாண்டில் வங்க மொழியை கௌடமொழி என்றே அழைத்தனர். வங்காள மொழி பேசுவதன் அடிப்படையிலேயே வங்காளதேசம் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனிநாடாக உருவாகியிருக்கும் வங்க தேசம் தான் முந்தைய இந்தியாவில் கிழக்கு வங்கமாக இருந்தது.

வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கம் வரை பரந்திருக்கும் குடாப் பகுதியே விரிகுடா எனப்படுகின்றது. இந்தப் பகுதியில் தான் கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற பெரிய ஆறுகள் கலக்கின்றன. இதை வங்காள விரிகுடா என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அளவில் சிறியதான குடா வளைகுடா (Gulf) என்றும், பெரிய அளவிலான பகுதி விரிகுடா (Bay)  என்றும் பெயர் பெற்றதோடு அப்படியே அழைக்கப்பட்டது. பரப்பளவில் சிறியதான மன்னார் வளைகுடாவையும், பெரியதான வங்காள விரிகுடாவையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். நமது சோழமண்டலத்தை ஐரோப்பியர்கள் கோரமண்டல் (Coromandel) என்றே அழைத்தார்கள்.

Cholar 3 “சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனது29 கடல்களையும் 4 பெருங்கடல்களையும் கொண்ட இப்புவிப் பரப்பில் சோழமண்டலக் கடலுக்கென்று மிகப் பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும், மலையாளக்கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடலாக ஆகும் என்ற கேள்வியினை அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும். கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார் வரையுள்ள கடற்பரப்பு சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. அதனால் மத்திய மாநில அரசுகள் மரபு அடிப்படையில் சோழ மண்டலக் கடல் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.