சோமாலியாவில் தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் – பலர் பலி

சோமாலியாவின் துறைமுக நகரான கிஸ்மயோ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்தரையாடலின் போது நேற்று (12) இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் தேர்தல் தொடர்பாக சட்டவாளர்களும், வயதானவர்களும் கலந்துயைரடல் ஒன்றை மேற்கொண்டிருந்தவேளையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அல்கைடாவுடன் தொடர்புடைய அல்-சபாப் எனப்படும் ஆயுதக்குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், சோமாலியா அரசை கவிழ்ப்பதற்கு அவர்கள் முயற்சிப்பதாகவும், சோமாலியா காவல்த்துறை தெரிவித்துள்ளது.

முதலில் கார்க் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் ஆயுததாரிகள் விடுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது, பெருமளவான சடலங்கள் விடுதிக்குள் கிடக்கின்றன. எனினும் நாம் விடுதியை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என படைத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.