செவ்வாய் கிரகத்தில் ஹெலிகொப்டர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது.

தற்போது நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இத்திட்டத்தின் மேலாளர் மிமி ஆங், இதுவரை யாருமே மார்ஸ் ஹெலிகொப்டரை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடவே இல்லை என்று   கூறியுள்ளார்.