செவ்வாயில் களிமண் கனிமங்கள்

செவ்வாய்க் கிரகத்தை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்து வருகின்றது.

கடந்த மே 12ஆம் திகதி மவுண்ட் ஷார்ப் பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டு அதனை படமாக எடுத்து அனுப்பியுள்ளது. அந்த இடங்களில் களிமண் கனிமங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

நீர் இருக்கும் இடங்களிலேயே அதிகளவு களிமண் உருவாகும். அந்த வகையில் பலநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல் இருந்திருக்கலாம் என்பதை கண்டறிய கியூரியாசிட்டி ஆய்வுகளை  மேற்கொண்டு வருகின்றது.