சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கைப்பேசி பரிசோதனைக்கு: நீதிமன்றம் உத்தரவிட்டது

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியாபெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்குக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்க தொலைபேசி தற்போது நீதிமன்றின் பொறுப்பில் உள்ளது. அதனால் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களப் பரிசோதனைக்கு ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.